Site icon Tamil News

கிழக்கு இலங்கையில் 15 வயது மாணவி கூட்டு வன்புணர்வு!! மூவர் கைது

 

 

15 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்திச் சென்று கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய மூவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பாடசாலை மாணவி தனது காதலனை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்ற வேளையிலேயே கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 5ஆம் திகதி மாலை இக்குற்றச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், புதுக்குடியிருப்பு, புளியடி வீதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியே கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 வயதுடைய இருவர் மற்றும் 32 வயதுடைய ஆரியம்பதியைச் சேர்ந்த ஒருவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Exit mobile version