Site icon Tamil News

வெசாக் பண்டிகைக்காக 4 சிறப்பு ரயில்கள்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாளை (05) மற்றும் 07 ஆம் திகதிகளில் கொழும்பு கோட்டை – பதுளை மற்றும் பெலியத்த – அனுராதபுரம் இடையே நான்கு விசேட புகையிரதங்களை இயக்குவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி நாளை காலை 06.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையிலும், காலை 7.30 மணிக்கும்

பெலியத்தவிலிருந்து அனுராதபுரத்திற்கு இரண்டு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

இதே விசேட புகையிரதம் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை மீண்டும் 7ஆம் திகதி காலை 7.00 மணிக்கும் அன்றைய தினம் அனுராதபுரத்திலிருந்து பெலியஅத்த வரை நண்பகல் 12.30 மணிக்கும் சேவையில் ஈடுபடவுள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

 

 

Exit mobile version