செப்டெம்பர் 12ஆம் திகதி கொண்டாடப்படும் 25ஆவது தேசிய கைதிகள் தினத்தை முன்னிட்டு 933 கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இதன்படி, இலங்கையின் அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின் பிரகாரம் 926 ஆண் கைதிகளும் 7 பெண் கைதிகளும் விசேட அரச மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.