Site icon Tamil News

ஆண் நண்பருடன் ஹோட்டலுக்கு வந்த பெண் உயிரிழப்பு!

பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டமையினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர் 40 வயதுடைய பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண், ஆண் ஒருவருடன் இந்த ஹோட்டலில் தங்க வந்திருந்த நிலையில், குறித்த ஆணே இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Exit mobile version