Site icon Tamil News

இலங்கையில் இளம் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : வைத்தியர்கள் எச்சரிக்கை!

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தோல் நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதன்போது இயற்கையான சருமத்தைப் பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியமானது என வலியுறுத்திய அவர்,  சில பெண்கள் சரியான விளக்கமின்றி சருமத்தை வெண்மையாக்கும் முகப் பூச்சுகளை (கிரீம்) பயன்படுத்துவது கூட புற்றுநோயின் தாக்கத்துக்கு காரணமாக அமையலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version