Site icon Tamil News

குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட 54 இலங்கையர்கள்!

குவைத்தில் தங்கியிருந்த 54 இலங்கையர்களின் விசா காலாவதியானதால் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் 53 பெண்கள் மற்றும் ஒரு ஆண் கொண்ட குழு இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இன்று குவைத்தில் இருந்து வருகை தந்தவர்களில் பெரும்பாலும் அனுராதபுரத்தில் இருந்து வந்தவர்கள், மேலும் குழுவில் பொலன்னறுவை, மொனராகலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களும் உள்ளனர்.

Exit mobile version