வடகொரியா, ஒரே வாரத்தில் 4 முறை மண்ணிலிருந்து விண்ணுக்குப் பாயும் ஏவுகணைகளையும் தாழப் பறக்கும் ஏவுகணைகளையும் சோதனை செய்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
தற்காப்பு ஆற்றலை மேம்படுத்துவது அதன் நோக்கம் என்று KCNA ஊடக நிறுவனம் தெரிவித்தது.
அண்டை நாடுகளின் பாதுகாப்புக்கு அந்தச் சோதனைகளால் பாதிப்பு இல்லை என்றும் அது குறிப்பிட்டது.
வழக்கமான நிர்வாகச் செயல்பாடுகளின் ஓர் அங்கம் அது என்றும் தெரிவிக்கப்பட்டது. போருக்கான ஏற்பாடுகள் அந்தச் சோதனைகள் என்று அந்நாட்டின் தலைவர் கிம் ஜோங் உன் (Kim Jong Un) இதற்கு முன்னர் கூறியிருந்தார்.