Site icon Tamil News

இலங்கையில் பாலியல் வன்கொடுமை தொடர்பில் 290 முறைப்பாடுகள் பதிவு!

இந்த வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பிலான 290 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்திலிருந்தே அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து கம்பஹா மற்றும் குருணாகல் மாவட்டங்களிலிருந்தும் இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version