Site icon Tamil News

குவைத்தில் இசை நிகழ்ச்சியில் கைது செய்யப்பட்ட 24 இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

”Sri Lankan Summer Nights” இசை நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை (2) கைது செய்யப்பட்ட பாடகர்கள் உட்பட 24 இலங்கையர்களை விடுதலை செய்துள்ளதாக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

குவைத் அதிகாரிகளின் முறையான அனுமதியின்றி இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது, இதனால் 26 இலங்கையர்கள் குவைத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் இலங்கையில் இருந்து குவைத் சென்று கச்சேரியில் பங்குபற்றிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் கலைஞர்களும் உள்ளடங்குவதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தூதரக அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இலங்கையர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு குவைத் பொலிஸாரிடம் முறையிட்டனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 26 பேரில் 24 பேர் நேற்று (3ம் தேதி) விடுவிக்கப்பட்டதாக தூதரகம் உறுதி செய்துள்ளது.

எவ்வாறாயினும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் இருவர் குவைத் பொலிஸ் காவலில் இருப்பதாகவும் அவர்கள் தற்போது விசாரணையில் இருப்பதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

“Ethera Api” அமைப்பின் குவைத் கிளையின் ஏற்பாட்டில் “Sri Lankan Summer Nights” இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Exit mobile version