Site icon Tamil News

இலங்கை 2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை: பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

2024 க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்கான இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் பணி நாளையுடன் (ஜூலை 10) நிறைவடையவிருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சமர்ப்பிக்கும் காலம் 2024 ஜூலை 12 வரை 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

Exit mobile version