Site icon Tamil News

இலங்கையில் முழுவதும் 20 சதவீதமான வாக்குகள் பதிவு!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணி நிலவரப்படி பெரும்பாலான மாவட்டங்களில் 20 சதவீதமாக இருந்ததாக அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி கொழும்பு 20 வீதம், களுத்துறை 32 வீதம், நுவரெலியா 25 வீதம், முல்லைத்தீவு 25 வீதம், வவுனியா 30 வீதம், இரத்தினபுரி 20 வீதம், அம்பாறை 30 வீதம், மன்னார் 29 வீதம், கம்பஹா 25 வீதம், புத்தளம் 23 வீதம், பொலன்னறுவை 35 வீதம், இன்று காலை 10 மணியளவில் குருநாகல் 30 வீதம், திகாமடுல்ல 30 வீதம், திருகோணமலை 30 வீதம், மாத்தறை 28 வீதம், கண்டி 20 வீதம் மற்றும் பதுளை 21 வீதமாக வாக்களிப்பு பதிவாகியுள்ளது.

கேகாலையில் 18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள அதேவேளை, மொனராகலை மற்றும் காலியில் 18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மட்டக்களப்பில் 17 வீதமும், யாழ்ப்பாண மாவட்டத்தில் மிகக் குறைந்த 10 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளன.

Exit mobile version