Site icon Tamil News

தலங்கம துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிப்பு!

தலங்கமவில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் கொமாண்டோ ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை STF) தெரிவித்துள்ளது.

ஹன்வெல்லவில் இராணுவ அதிகாரிகளுடன் இடம்பெற்ற மோதலில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, கடந்த ஆகஸ்ட் 25ஆம் திகதி தலங்கமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபரே இவ்வாறு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

Exit mobile version