Site icon Tamil News

பிரபல ஜோதிடர் இந்திக்க தொட்டவத்தவிற்கு விளக்கமறியல்

இந்திக்க தொட்டவத்த எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாளிகாகந்த பிரதான நீதவான் லோச்சனா அபேவிக்ரம வீரசிங்கவினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமையவே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்கள் ஊடாக கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் இன்று (06) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணனி குற்றவியல் விசாரணைப் பிரிவில் இன்று முன்னிலையாகுமாறு இந்திக தொட்டவத்தவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தாக தெரியவருகிறது.

கைது செய்யப்பட்டுள்ள இந்திக தொட்டவத்த இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதேவேளை, ஜோதிடர் இந்திக தொட்டவத்த பிறப்பிலேயே பார்வையை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version