Site icon Tamil News

அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்த 18 பேர் பரிதாபமாக மரணம்

தெற்கு மெக்சிகோவில் குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் கவிழ்ந்ததில் 18 பேர் உயிரிழந்தனர் மற்றும் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த பகுதி மலைகள் வழியாக வளைந்து செல்லும் வனப்பகுதி என்று கூறப்படுகிறது.

வெனிசுலா மற்றும் ஹைட்டியில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் நோக்கில் சிலர் இருந்ததாகவும், அதிவேகத்தால் அது கவிழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த 8,200க்கும் அதிகமானோர் உயிரிழந்து காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

Exit mobile version