Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் பொலிஸ் சேவையில் விண்ணப்பித்துள்ள 15,000 வெளிநாட்டவர்கள்

குயின்ஸ்லாந்து பொலிஸ் சேவையில் வெளிநாட்டு பணியாளர்களை பணியமர்த்தும் திட்டத்திற்கு கிட்டத்தட்ட 15,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஆண்டுக்கு 500 வெளிமாநில தொழிலாளர்களை 05 ஆண்டுகளுக்கு வேலைக்கு அமர்த்த மாநில பொலிஸாருக்கு கடந்த பெப்ரவரி மாதம் மாநில அரசும், மத்திய அரசும் அனுமதி வழங்கியது.

சிங்கப்பூர் – பிஜி – தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளதாக குயின்ஸ்லாந்து மாநில பொலிஸ் துறையும் அறிவித்திருந்தது.

முதல் அணி ஒக்டோபர் மாதத்திற்குள் பயிற்சியைத் தொடங்க உள்ளது.

குயின்ஸ்லாந்து பொலிஸ் சேவையின் தற்போதைய பற்றாக்குறை இதன் மூலம் விரைவாக சமாளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version