Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் எரிபொருள் விலை உயரும் அபாயம்

ஆஸ்திரேலியாவில் எரிபொருள் விலை உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விநியோகத்தை கட்டுப்படுத்தும் ஒபெக் உறுப்பு நாடுகளின் முடிவால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

தற்போது ஒரு லீற்றர் பெற்றோலின் தேசிய விலை 1.86 டொலர்களாகும்.

இது ஜனவரியில் 1.73 டொலரில் இருந்து 13 சதவீதம் அதிகரித்துள்ளது என்று சந்தை தரவு அறிக்கைகள் காட்டுகின்றன.

தற்போது சிட்னியில்தான் பெட்ரோல் விலை அதிகபட்சமாக பதிவாகி உள்ளது.

பல பகுதிகளில் பெற்றோல் விலை 02 டொலர்களை தாண்டியுள்ளதுடன் சில இடங்களில் பெற்றோல் விலை 2.11 டொலர்களை எட்டியுள்ளது.

எதிர்வரும் ஈஸ்டர் வாரத்தில் தேவை அதிகரிப்புடன் பெட்ரோல் விலையில் அதிகரிப்பு ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய தேசிய சாலை மற்றும் போக்குவரத்து ஓட்டுநர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, ANZAC வார இறுதி வரை பெட்ரோல் விலையில் எந்தக் குறைப்பும் இருக்காது.

Exit mobile version