Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் புதிய வீடு கட்ட காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

ஆஸ்திரேலிய மக்கள் புதிய வீடுகளைக் கட்டுவதற்கு 1.4 மில்லியன் டொலர் வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியத் தொழிற்கட்சி அரசாங்கம் நாடு முழுவதும் கட்டுப்படியாகக்கூடிய வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்நாடு அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்கப் போராடி வருகிறது.

பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி (Anthony Albanese) அந்தத் தொகை மாநில, வட்டார அரசாங்கங்களிடம் 2 வாரங்களுக்குள் கொடுக்கப்படும் என்று கூறினர்.

அந்தத் தொகையை 2025ஆம் ஆண்டு ஜூன் 30ம் தேதிக்குள் பயன்படுத்தவேண்டும் என்றும் அவர் காலக்கெடு விதித்துள்ளார்.

வீடுகளுக்காகக் காத்திருக்கும் ஆஸ்திரேலியர்களுக்கு விரைவில் வீடு கிடைக்க அந்த நிதி பெரிதும் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version