Tamil News

மட்டக்களப்பு வேற்றுச்சேனை பகுதியில் மினிசூறாவளி தாக்கியதால் 15 வீடுகள் சேதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேற்றுச்சேனை பகுதியில் மினிசூறாவளி தாக்கியதில் 15வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் வீட்டிலிருந்தவர்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கில் நேற்று முதல் சீரற்ற காலநிலை நிலவும் காரணமாக நேற்று முதல் கடும் காற்றுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் மழைபெய்துவருகின்றது.இன்று காலை போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேற்றுச்சேனை பகுதியில் மினிசூறாவளி தாக்கியதில் பல வீடுகள் சேதமமைடந்துள்ளன.

இந்த சூறாவளி காரணமாக பயன்தரு மரங்களும் விழுந்துள்ளதுடன் சில இடங்களில் வீதிகளிலும் மரங்கள் முறிந்துவீழ்ந்துள்ளதனால் போக்குவரத்துச்செய்வதில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டதுடன் பாதிப்புகள் குறித்தும் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்தும் சீரற்ற காலநிலை நிலவுவதன் காரணமாக பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு வானிலை அவதான நிலையம் அறிவுறுத்திவருகின்றது.

Exit mobile version