Site icon Tamil News

12 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்  12 பேர்  நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த  12 மீனவர்களும் கடந்த  ஞாயிற்றுக்கிழமை வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு கடந்த திங்கட்கிழமை பருத்தித்துறை  நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் இன்றுவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இது குறித்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 12 மீனவர்களுக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒன்றரை வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய படகு அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

குறித்த பன்னிரண்டு மீனவர்களையும் இந்தியாவிற்கு அனுப்பும் பணிகளில் இந்திய துணை தூதரகம் ஈடுபட்டு வருகிற

Exit mobile version