Site icon Tamil News

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 11 சிறுவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்

கடந்த 24 மணித்தியாலங்களில் 16 வயதுக்குட்பட்ட 11 சிறுவர்கள் பல்வேறு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கபுகொல்லாவ பொலிஸ் பிரிவில் வசிக்கும் 13 வயதுடைய மூன்று சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர்களில் ஒருவரான 52 வயதான விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்ப உறவினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏனைய சம்பவங்கள் கம்புருபிட்டிய, ஹங்கம, வெலிகம, கதிர்காமம், நெல்லியடி, ஹங்கமுவ, கலவான மற்றும் மாத்தறை பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளன.

Exit mobile version