Site icon Tamil News

மாற்றாந்தாயின் கோர முகம் – 17 வயது சிறுமியை அடித்து கொடுமைப்படுத்திய கொடூரம்

ராகம – குருகுலாவ பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய சிறுமியின் 39 வயதுடைய சித்தியை கொடூரமாக தாக்கி சித்திரவதை செய்ததாக சந்தேகத்தின் பேரில் ராகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமயறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான 17 வயது சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு வடக்கில் உள்ள ராகம போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்துவதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெண் பொலிஸ் அதிகாரியின் கண்காணிப்பில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த 17 வயது சிறுமியின் தாய் உயிரிழந்துள்ளதாகவும் அதன் பின்னர் தந்தை மீண்டும் திருமணம் செய்து கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்குரிய பெண்ணுக்கு அந்தத் திருமணத்தில் ஒன்பது வயதுடைய மகள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பதினேழு வயது சிறுமியின் தந்தை பல வருடங்களாக கொரியாவில் பணிபுரிந்து வருவதாகவும், ராகம குருகுலாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் உள்ள சிறுமி ஒருவரும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாக ராகம பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version