Site icon Tamil News

வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலங்களாக மீட்பு

வவுனியா – குட்செட் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்களின் நான்கு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

42 வயதான தந்தை தூக்கில் தொங்கிய நிலையிலும், 36 வயதுடைய தாய், 09 வயது மற்றும் 03 வயதுடைய மகள்களின் சடலங்கள் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தாய் ஆசிரியையாக பணிபுரிந்து வருவதாகவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தந்தை தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தற்கொலை செய்து கொண்டவர் தனது வியாபாரத்திற்காக வாங்கிய கடனை செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அதனை உறுதிப்படுத்தும் வகையில் எந்த தகவலும் வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version