எதிர்காலத்தில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டு தமக்கு சுகாதார அமைச்சர் பதவி வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
பண்டாரகம தனியார் வைத்தியசாலைக்கு விஜயம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், எப்பொழுதும் அரசியல் சார்ந்துதான் முடிவெவு எடுப்பதனால் தான் மக்கள் தம்மை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றும் ராஜித சேனாரத்ன கூறினார்.