Site icon Tamil News

யாழில் 3 பிள்ளைகளின் தாய் ஒருவரின் அதிர்ச்சி செயல்

யாழ்ப்பாணம் – புண்ணாலைக் கட்டுவன் பகுதியல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 28 வயதான குடும்பப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 157 கிராம் கஞ்சா கைப்பெற்றப்பட்டது.

இவர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நவக்கிரி பகுதியில் வைத்து ஒரு கிராம் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.

இருவரும் அச்சுவேலி பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version