Site icon Tamil News

மின்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

அரியலூர் மாவட்டம் கண்ணுச்சாமி தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (50). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் ரவிச்சந்திரன் கறம்பக்குடி மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கம்பியாளராக பணிபுரிந்து வரக்கூடிய நிலையில் கறம்பக்குடி பகுதியிலேயே வாடகைக்கு  வீடெடுத்து குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ரவிச்சந்திரன் குடும்பத்தினர் அரியலூர் மாவட்டத்திற்கு சென்ற நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து ரவிச்சந்திரன் வசிக்கும் வீட்டிற்கு அருகாமையில் உள்ளவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற கறம்பக்குடி காவல் துறையினர் ரவிச்சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ரவிச்சந்திரன் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version