Site icon Tamil News

மாபெரும் ஆண்களுக்கான கபடி போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு வடக்கு மாவட்ட சார்பில் வடக்கு ஒன்றிய சார்பில் ஒன்றிய செயலாளர் தமிழ் ஐயாஏற்பாட்டில்தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது.

இந்த கபடி போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டது இறுதியாக தமிழ்நாடு காவல்துறை அணியினரும் கோமாபுரம் அணியினரும் களம் கண்டனர் இதில் தமிழ்நாடு காவல்துறை அணியினர் முதலிடம் பிடித்து முதல் பரிசையும் கோப்பையையும் தட்டிச் சென்றனர்.

இரண்டாம் பரிசு கோமபுரம்  அணியினர் மூன்றாம் பரிசு பகட்டுவான் பட்டிஅணியினர் ரொக்கம் கோப்பையும்  தட்டிச் சென்றனர் இந்த நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவவி மெய்ய நாதன் கலந்து கொண்டு அரையிறுதி ஆட்டத்தை தொடங்கி வைத்தார்.

இறுதி ஆட்டத்தை வடக்கு மாவட்ட செயலாளர் கே கே செல்ல பாண்டியன் தஞ்சாவூர் மனிதநேய பண்பாளர் எஸ் எஸ் ராஜ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்து பரிசுகளையும் கோப்பைகளையும் வழங்கினார்கள்.

இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் ஐயா செய்திருந்தார் நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம் வரவேற்பு உரையாற்றினார் நகர செயலாளர் ராஜா நன்றி உரையாற்றினார்.

 

Exit mobile version