Site icon Tamil News

மாணவியிடம் மோசமாக நடந்துகொண்ட அதிபர் கைது

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பிரபல தேசிய பாடசாலை ஒன்றில் பதினொன்றாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கட்டாயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அதிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அதிபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக குருவிட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரான அதிபர் மாணவியை அலுவலகத்திற்கு அழைத்து வந்து துஷ்பிரயோகம் செய்ததாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் மாணவி தெரிவித்ததையடுத்து, பெற்றோர்கள் இந்த புகாரை அளித்துள்ளனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version