Site icon Tamil News

பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரயில்வே பாதுகாப்பு படை காவலர்

சென்னை தாம்பரம் ரயில்வே சுரங்கபாதையில் நேற்று இரவு பத்து மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்த உயர்நீதி மன்ற வழக்கறிஞரின் மனைவியை பின் தொடர்ந்து மது போதையில் வந்த  தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படை   உதவி ஆய்வாளர் சீனிவாச நாயக் (32) பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது,

இது குறித்து அப்பெண் கணவரிடம் கூறியதால் சம்பவ இடத்திற்க்கு வந்த கணவர் காவல் துறை கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்,

சம்பவ இடத்திற்க்கு போலீசார் வருவதை கண்ட சீனிவாச நாயக் தப்பி செல்ல முயன்ற போது அப்பெண்ணின் கணவர் மற்றும் வழக்கறிஞர்கள் பொதுமக்கள் மக்கள் உதவியுடன் கையும் களவுமாக பிடித்து தாம்பரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்,

அப்போது மது போதையில் இருந்த சீனிவாச நாயக் தான் ரயில்வே போலீஸ் என்று கூறி தாம்பரம் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது,இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் சீனிவாச நாயக்யிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version