Site icon Tamil News

பெண்களுக்கான மாரத்தான் போட்டி

மதுரை காந்தி மியூசியத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மதுரை  ஐஸ்வர்யம் ட்ரஸ்ட் சார்பில் மருத்துவ விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில்  பெண்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது.,

ஐந்து கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இப்போட்டியில் 18  வயது முதல் 60 வயது வரை உள்ள பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி அவர்கள்,, காவல்உதவி ஆணையர் ஆறுமுகசாமி அவர்கள்,மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்

ரத்தினவேல் அவர்கள், பேங்க் ஆப் மகாராஷ்டிரா மேலாளர் ரூபா வாசுதேவன்( INTERNATIONAL PARA ATHELETE) ஆகியோர்  மராத்தான் போட்டியில் கலந்து கொண்ட கொடி அசைத்து துவக்கி வைத்தனர். வெற்றி பெற்ற

பெண்களுக்கு தங்க நாணயம் பரிசாக  வழங்கி கௌரவப்படுத்தப்பட்டனர் ,நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஐஷ்வர்யம் அறக்கட்டளையின் நிர்வாகி மருத்துவர் R.பாலகுருசாமி மற்றும் அவரது குழுவினர்  சிறப்பாக ஏற்பாடு  செய்திருந்தனர்…

மதுரை செய்தியாளர்

செ.பெரியதுரை

Exit mobile version