Site icon Tamil News

புருண்டியில் கனமழை : 13 தங்கச் சுரங்க தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு!

புருண்டியில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக ருகோகோ ஆறு பெறுக்கெடுத்துள்ளது.

இதனால் குறித்த பகுதியில் தங்கச் சுரங்கத்தில் பணியாற்றியவர்களை மீட்க முடியாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி சுமார் 13 பேரின் உடல்கள் மாத்திரம் மீட்கப்பட்டதாகவும், மேலும் இருவரின் உடல்களை மீட்க முடியவில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக சுரங்க தொழிலாளர்களை மீட்பதில சிரமம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Exit mobile version