Site icon Tamil News

பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 13 பேர் உயிரிழப்பு

பெரு நாட்டில் பேருந்தும் காரும்நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெருவின் பியூரா பகுதியில் இருந்து பெரு நாட்டின் தலைநகரான லிமாவுக்கு 50 பயணிகளுடன் சென்ற பேருந்துடன்,  எதிரே வேகமாக வந்த கார்  நேருக்கு நேர் மோதி  இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில்  பேருந்தும், காரும் தீப்பிடித்து எரிந்ததில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

Exit mobile version