Site icon Tamil News

பிள்ளையை அழைத்துக்கொண்டு பாடசாலைக்கு வந்த தாய் மீது கொடூரமாக தாக்குதல்

பிள்ளையை முதலாம் தரத்திற்கு சேர்ப்பதற்காக பாடசாலைக்கு வந்த தாய் ஒருவரை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வைத்து கணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் படுகாயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெவலேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெண்ணின் கழுத்து மற்றும் கை ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெவலேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெவலேகம மா ஓயா வத்த பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயொருவர் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.

காயமடைந்த பெண்ணின் கணவர் சில காலமாக போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்ததாகவும், தொலைபேசியில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் கத்தியால் குத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version