Site icon Tamil News

பிரான்ஸில் 4வது மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி

பிரான்ஸில் நான்காவது தளத்தில் இருந்து விழுந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை காலை இச்சம்பவம் Poissy (Yvelines) நகரில் இடம்பெற்றுள்ளது.

rue Saint-Sébastien வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நான்காவது தளத்தில் இருந்து நான்கு வயது சிறுவன் ஒருவன் தவறி கீழே விழுந்துள்ளார்.

தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் சிறுவனைக் காப்பாற்ற முடியவில்லை.

சம்பவத்தின் போது வீட்டில் சிறுவனைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Exit mobile version