Site icon Tamil News

பால் விலையை உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

ஆவின் நிர்வாகத்திற்கு பால் வழங்கும் விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கையான பால் கொள்முதல்  விலையை உயர்த்த கோரி கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் கோவை மாவட்ட விவசாய சங்கம் இணைந்து பால் விலையை உயர்த்த கோரியும் ஜந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் அடையாள  கண்டன ஆர்ப்பாட்டம் கோவை சிறுவாணி சாலை ஆலந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு நடைப்பெற்று வருகிறது. இதில் 150 கற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு கண்ட கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாட்டு தீவன மானியத்தை வழங்கிடு , பால் விலையை உயத்திட கோரியும் , ஊக்கத்தொகையை வழங்கிட கூறி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் கனத்த இதயத்துடன் 150 லிட்டர் பாலை ரோட்டில் ஊற்றி தங்கள் எதிர்பை தெரிவித்து உள்ளனர். மேலும் பால் விலையை உயத்திட வேண்டும் . பால் விலை லிட்டருக்கு ஐம்பது ரூபாய் ஆதரிக்க கலப்பு தீவனத்திற்கு வாரியம் வழங்க வேண்டும். சங்க பணியாளர்களுக்கு பணி நேர்ந்தாலும் வேண்டும். கால்நடைகளுக்கு காப்பீடு முழுமையாக வழங்க பால் உற்பத்தியாளர்கள் வருடாந்திர ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்ற ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தவறும் பட்சத்தில் பால் உற்பத்தை முற்றிலும் நிறுத்தி விடுவதாக விவசாயிகள் கூறியுள்ளார்.

இது குறித்து செய்திய்ளர்களுக்கு தமிழக விவசாய சங்க தொண்டாமுத்தூர் வட்டாரத் தலைவர் ஆறுச்சாமி பேட்டி அளித்தார்.

அதில் பால் விலை விவசாயிகள் உற்பத்தி செய்யும் எந்த பொருள்களுக்கும் விலை இல்லை.

பால் விற்கும் விலையில் மாடுகளை வைத்து பராமரிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. ஒரு பாட்டிக்கு ஒரு நாள் ஒன்றுக்கு பராமரிப்பு செலவு 250 ரூபாய் ஆகிறது.

நஷ்டத்த்திற்கு இடையே பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஆவின் பாலகம் உற்பத்தி லாபத் தொகை, ஊக்கத்தொகை போன்றவற்றை எதுவுமே கொடுக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் பக்கத்து மாநிலத்தில் ஒரு லிட்டருக்கு பால் நாற்பத்தி எட்டு ரூபாய் வரையில அரசு கொடுக்கிறது. தமிழக அரசு ஏன் கொடுக்க முடிவதில்லை.

ஒரு லிட்டருக்கு 16 ரூபாய் அதிகமாக கொடுத்திருந்தனர். எனவே அரசு நல்ல ஒரு முடிவை எடுக்க வேண்டும். பால் விலையை உயர்த்த வில்லை என்றால் ஒரு வாரத்தில் பச்சாபாளையத்தில்  உள்ள ஆவின் பாலகத்தை முற்றியடை போவதாக தமிழக விவசாய சங்கம் சார்பாக தெரிவித்துள்ளனர்.

மேலும் விவசாயிகளுக்கு ஒரு லிட்டருக்கு 50 ரூபாய் வரையில் விலை கொடுக்க வேண்டும். இன்றைய தினம் நடைபெற்ற போராட்டம் கவனஈர்ப்பு  ஆர்ப்பாட்டமாக இன்று நடைபெற்றது.

ஒரு வாரத்தில் தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்து அவர்களிடம் முறையிடுவோம். செவி சாய்க்காத பட்சத்தில் ஆவின் பாலத்தை முற்றுகைய முற்றுகையிடுவோம் என்று கூறினார்.

Exit mobile version