Site icon Tamil News

பாணந்துறையில் திடீரென கரைக்கு வந்த பாரிய முதலை

பாணந்துறை கடற்கரைக்கு இன்று (28) பிற்பகல் ஏறக்குறைய ஏழு அடி நீளம் கொண்ட முதலை வந்துள்ளது.

மாலை 5.30 மணியளவில் கடற்கரைக்கு அருகில் உள்ள கல் அருகே முதலை இருப்பதைக் கண்ட மீனவர் ஒருவர் கடலோர காவல்படை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.

பாணந்துறை உயிர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்த போது முதலை கடலுக்குள் சென்றதுடன் கரையில் இருந்து சுமார் 10-20 மீற்றர் தொலைவில் சுற்றித் திரிந்தது.

முதலை தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த கட்ட நடவடிக்கைகள் நாளை (29) மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version