Site icon Tamil News

பத்துக்கும் மேற்பட்டோர் காயம்

வாலாஜாப்பேட்டை அருகே பழுதடைந்து சாலையில் திடீரென நின்ற டோசர் வேண் மீது பின்னால் வந்த தனியார் தொழிற்சாலை பேருந்து மோதிய விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் காயம்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த தென்கடப்பந்தாங்கல் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திராவில் இருந்து இறைச்சிக் கோழிகளை ஏற்றிக்கொண்டு டோசர் வேன்  ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது அப்போது எதிர்பாராத விதமாக வேண் பழுதடைந்து

சாலையிலேயே திடீரென நின்று உள்ளது இன்னிலையில் சுங்குவாசத்திரத்தில் செயல்பட்டு வரும் தனியார் செல்போன் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ராணிப்பேட்டையில் இருந்து ஊழியர்களை ஏற்றி செல்லும் பேருந்து வேகமாக வந்து முன்னாள் பழுதடைந்து  சாலையில் நின்ற டோசர் வேன் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது

இந்த விபத்தில் தனியார் தொழிற்சாலை பேருந்தில் பயணம் செய்த பத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் விபத்து குறித்து வாலாஜாபேட்டை போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டது தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்

மேலும் விபத்து காரணமாக திருச்சிக்காக கொண்டு வந்த கோழி சாலையில் அங்கங்கே சித்தரித்தால்  அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

விபத்து குறித்து வாலாஜாபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை

Exit mobile version