Site icon Tamil News

பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடிவரும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்

நீதிமன்ற தீர்ப்பைவரவேற்று பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடிவரும் திருவொற்றியூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு வழங்கினார். அப்போது, அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும்,

பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதன்மூலம் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்றும் தெரிய வந்துள்ளதால் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வானார் .

பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் அவர் போட்டியின்றி தேர்வானார்

இதனை வரவேற்று அக்கட்டியின் தொண்டர்கள் நிர்வாகிகள் என பலரும் கொண்டாடிவரும் நிலையில் வடசென்னை திருவொற்றியூர் பகுதியில்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே குப்பன் தலைமையில் திரண்ட தொண்டர்கள் தீர்ப்பினை வரவேற்று பட்டாது வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடிவருகின்றனர்

Exit mobile version