Site icon Tamil News

நிதித் தேவையை திறைசேரி கோரினால் வழங்கமுடியும் என மத்திய வங்கி அறிவிப்பு

திறைசேரி கோரும் நிதி தேர்தலுக்காக அல்லது வேறு தேவைக்கா என்பதை ஆராய்வது மத்திய வங்கியின் கடமை அல்ல.

ஒரு மாதத்திற்கான செலவீனங்கள் குறித்து திறைசேரி வாராந்தம்  தேவையான நிதி அவசியத்தை அறிவித்தால் அவர்களுக்கான நிதியை மத்திய வங்கி விடுவிக்கும் என தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க,

அந்த பணம் எதற்காக பயன்படுத்தப்படுகின்றது என்பதை மத்திய வங்கி அவதானிக்காது என  தெரிவித்துள்ளார்.

அரச துறையினருக்கான கொடுப்பனவுகள், கடன் செலுத்துகை போன்ற விடயங்கள் இருப்பின் அவற்றை கருத்தில் கொள்ளாது செயற்பட முடியாது.

ஆகவே அவ்வாறான தேவைகள் இருந்தால் அதனை அறிவிப்பார்கள், அவசர நேரங்களில் மத்தியவங்கி அதற்கான நிதி விடுவிப்பிற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது எனவும் அவர் தெரிவித்

Exit mobile version