Site icon Tamil News

தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை

சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலம் ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன் (25) இவருடைய தந்தை பாலசந்திரன் இறந்த நிலையில் தாய் செல்வியுடன் வசித்து வந்தார்,

இந்நிலையில் செல்வி வீடிலேயே சிற்றுண்டி கடை நடத்தி வரும் நிலையில் ஹரிஹரன் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்து மது பழக்கத்திற்க்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது,

நேற்று வழக்கம் போல் மதுபோதையில் வந்த ஹரிஹரனை தாய் செல்வி வேலைக்கு செல்லும்படி கண்டித்ததாக கூறப்படுகிறது,

இதனால் மனஉளைச்சலில் இருந்த ஹரிஹரன் வீட்டின் மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்,

தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Exit mobile version