Site icon Tamil News

கோடை விடுமுறை வேண்டும்-அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்

தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோருக்கு பள்ளிகளுக்கு வழங்குவது போன்று கோடை விடுமுறை வழங்க வேண்டும் அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முழுவதும் நேற்று முதல் அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சிய அலுவலகங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

அதேபோன்று புதுக்கோட்டையிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 300க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில் இன்று காலை 7:00 மணி முதல் புதுக்கோட்டையில் மழை பெய்து கொண்டு உள்ளது

மழையையும் பொருட்படுத்தாது அங்கன்வாடி பணியாளர்கள் தங்களது கைகளில் குடையை பிடித்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு தமிழர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

Exit mobile version