Site icon Tamil News

ஜெயலலிதாவின் பிறந்தநாளத்தை யொட்டி மாவட்ட அளவில் குத்துச்சண்டை போட்டி

சென்னை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட திருவிக நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அதிமுக 34 வது வட்ட கழக சார்பில் வட்டச் செயலாளர் ஆனந்தன் ஏற்பாட்டில்,

மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்த தினத்தை வெட்டி மாவட்டம் அளவில் மாணவ மாணவிகளுக்கு குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது போட்டியில் திருவள்ளூர் காஞ்சிபுரம் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டனர்,

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அதிமுக கழக செய்தி தொடர்பாளர் சசிரேகா, மாநில இளைஞர் அணி இணைச்செயலாளர், லட்சுமி நாராயணன், மாநில மருத்துவர் அணி செயலாளர் வேணுகோபால் ஆகியோர் கலந்துகொண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்திய பின்னர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு நினைவு பரிசினை வழங்கினர்,

 

Exit mobile version