Site icon Tamil News

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு பாராட்டு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டமான ஜல் ஜீவன் திட்டத்தில் 2020-2021 ஆம் ஆண்டு ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தி குறித்த காலத்தில் 100% திட்ட இலக்கினை அடைந்ததற்காக நல்ஆளுமைக்கான விருதினை பாரத பிரதமர் அவர்களால் 21.04.2023 தேசிய குடிமை பணி தினத்தன்று புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்திக்கு வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊரக வளர்ச்சித்துறை அனைத்து நிலை அலுவலர்களை சிறப்பிக்கும் நிகழ்வாக மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற விழாவில்,மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இவ்விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் செல்வகுமார் மற்றும் மாவட்ட அளவிலான பல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version