Site icon Tamil News

சுங்குடி சேலைகளை அணிந்து மகளிர் தினத்தை கொண்டாடிய சிறைவாசிகள்

மதுரையில் உள்ள பெண்கள் தனிச்சிறையில் சிறைவாசிகளுடன் சிறையில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் இணைந்து சுங்குடி சேலைகளை அணிந்து மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

பெண்களின் மகத்துவத்தை பறைசாற்றும் விதமாக நாடு முழுவதும்  மார்ச் 8 ஆம் தேதி நாடு முழுவதும் சர்வதேச மகளிர் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக மதுரை பெண்கள் தனிச்சிறையில் உள்ள பெண் சிறைவாசிகளுடன் சிறையில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் இணைந்து சிறைவாசிகளின் கைவண்ணத்தில் உருவான சுங்குடி சேலைகளை அணிந்து மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மதுரை சிறைத்துறை சரக துணைத்தலைவர் பழனி மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் எஸ்.வசந்தகண்ணன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்

மேலும் மதுரை பாத்திமா மற்றும் லேடி டோக் கல்லூரி (தனியார் கல்லூரி) மாணவிகள் 50 மேற்பட்டோர் கலந்து கொண்டு பரதநாட்டியம், வில்லுப்பாட்டு, நாடகம் உள்ளிட்டவை அரங்கேற்றினார்.

Exit mobile version