Site icon Tamil News

சிறுவர்களின் போஷாக்கின்மை நிலைமை தொடர்பில் கண்டறிய விசேட குழு!

இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு குறித்த விவகாரம் சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் என்பதுடன். அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்யவுள்ளது.

இக்குழு பாரளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version