Site icon Tamil News

சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்கள் பொய்யானவை

பல்லாவரம் அடுத்த  நாகல்கேணி பகுதியில் இயங்கி வரும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களை சங்கர் நகர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் நேரில் சந்தித்தார்

தொடர்ந்து அவர்கள் பணி புரியும் இடங்களிலும் பொது இடங்களிலும் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா எனவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளது எனவும் கேட்டு தெரிந்து கொண்டார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர் சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்கள் பொய்யானவை அவற்றை நம்பி பதட்டம் அடைய வேண்டாம் உங்களுக்கு முழு பாதுகாப்பு நாங்கள் தருகிறோம் எனவும் வாக்குறுதி அளித்தார். வடமாநில தொழிலாளர்களும் தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அந்த வீடியோக்களை பகிர வேண்டாம் என கூறியதோடு

மேலும் அவர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டதோடு தங்களுக்கு ஏதேனும் பாதுகாப்பு சம்பந்தமாக உதவிகள் தேவைப்பட்டால் உடனடியாக சங்கர் நகர் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்

சங்கர் நகர் காவல் நிலைய உதவி  ஆய்வாளர்கள்

Exit mobile version