Site icon Tamil News

கொவிட் 19 தாக்கம் அமெரிக்காவில் குறைந்தது 238,500 அனாதரவாளர்களை உருவாக்கியுள்ளது.

கொவிட் 19 வைரஸ் தொற்றின் தாக்கத்தினால்  அமெரிக்காவில் குறைந்தது 238,500 கோவிட்-19 அனாதரவாளர்களை உருவாக்கியுள்ளதாகவும், அவர்களின் வாழ்க்கை கடந்த மூன்று ஆண்டுகளில் பெற்றோர் அல்லது முதன்மை பராமரிப்பாளரின் இழப்பால் உயர்ந்துள்ளது என்றும்  லண்டன் இம்பீரியல் கல்லூரி அதன் ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது.

மார்ச் 2020 இல் உலக சுகாதார அமைப்பு கொவிட் 19ஐ ஒரு தொற்றுநோயாக அறிவித்ததிலிருந்து உலகளவில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான கோவிட் அனாதரவாளர்கள்  உள்ளனர் என்று CNN கடந்த ஊடகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இதேவேளை அனாதை நிலை வறுமை, துஷ்பிரயோகம், தாமதமான வளர்ச்சி, மனநல சவால்கள் மற்றும் கல்விக்கான அணுகல் குறைவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய பராமரிப்பாளர் இழப்பில் பாதிக்குக் காரணமான ஆறு அமெரிக்க மாநிலங்களில் கலிபோர்னியாவும் ஒன்றாகும். நியூயார்க் மற்றொரு மாநிலமாகும்.

மேலும் கொவிட் 19 நோயால் பெற்றோரை அல்லது பராமரிப்பாளரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகையை வழங்கும் சட்டத்தை அறிமுகப்படுத்திய நாட்டிலேயே இரண்டாவது மாநிலமாக மாறியுள்ளது.

Exit mobile version