Site icon Tamil News

கேரளா ஆட்டோவில் மோதிய லாரி சம்பவ இடத்தில் பலியான ஆட்டோ ஓட்டுநர்

சூலூரில் கேரளா ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ ஓட்டுநர் பலியான சம்பவம் மோதி விட்டு தப்பி ஓடிய லாரி மற்றும் ஓட்டுநரை தேடி வருகின்றனர்

கோவை மாவட்டம் சூலூர் எல் அண்ட் டி பைபாஸ் சாலையில்  நான்கு மணி அளவில் நீலாம்பூர் டோல்கேட்டை தாண்டி கேரள பதிவு எண் கொண்ட பயணிகள்  கொண்ட ஆட்டோ ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது.

அதில் கேரளாவைச் சேர்ந்த சசிக்குமார்(48) ஆட்டோவை ஓட்ட மற்றும் சேலம் சின்னதிருப்பதியைச் சேர்ந்த இளம்வழுதி(52) பின்னால் அமர்ந்து கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது குளத்தூர் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி ஆட்டோவின் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியதில் ஆட்டோவை ஓட்டி வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் ஆட்டோ இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவருடன் ஆட்டோவில் பயணித்த சேலம் சின்ன திருப்பதி சேர்ந்த இளம்வழுதி என்பவர் பலத்த காயங்களுடன் வலி தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தார்.

சம்பவத்தை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஆட்டோவை பிரித்து எடுத்து உள்ளே சிக்கி இருந்த இருவரையும் மீட்டனர் இதில் சசிகுமார் உயிரிழந்த நிலையில் இளம்வழுதியை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆட்டோ மீது  மோதிய லாரி நிற்காமல் சென்று விட்டது. இது தொடர்பாக சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version