Site icon Tamil News

குழந்தை கண்முன்னே நீர்வீழ்ச்சியில் குதித்த தாய்

குடும்ப தகராறு காரணமாக திம்புள்ள பத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்ய வந்த நான்கு பிள்ளைகளின் தாயார் (22) பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள டெவோன் நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே குதித்து காணாமல் போயுள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

திம்புல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹவத்த பிரதேசத்தில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தாயான லெச்சுமன் நிஷாந்தனி (வயது 34) என்பவர் டொவன் நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்து காணாமல் போயுள்ளார்.

குடும்பத் தகராறு தொடர்பில் இரண்டு பிள்ளைகளுடன் திம்புல பத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து நான்கு பிள்ளைகளின் தாய் தனது ஒரு குழந்தையுடன் நீர்வீழ்ச்சிக்கு சென்று குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாயுடன் சென்ற குழந்தை மீண்டும் பொலிஸாரிடம் ஓடிவந்து தாய் நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே குதித்ததாக கூறியதை அடுத்து, குதித்ததாக கூறப்படும் நான்கு பிள்ளைகளின் தாயை கண்டுபிடிக்க திம்புல பத்தனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Exit mobile version