Site icon Tamil News

குழந்தையை கடத்த முயன்ற வாலிபருக்கு தர்மஅடி

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே சோகண்டி ஊராட்சிக்கு உட்பட்ட அடவிளாகம் கிராமத்தில் இன்று காலை இருசக்கர வாகனத்தில் வந்த நபர் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து,

இரு சக்கர வாகனத்தில் கடத்த முயன்ற போது குழந்தை கூச்சலிடவே குழந்தையை விட்டு தப்பி ஓடிய வாலிபரை கிராம மக்கள் விரட்டிச் சென்று பிடித்து தர்மஅடி கொடுத்தனர்,

பின்னர் திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் விரைந்து வந்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டதில் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புங்கேரி கிராமத்தைச் சேர்ந்த வசந்தி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சாந்தகுமார் வயது 26 என்பது தெரிய வந்தது இவன் வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடியவனாக தெரியவந்ததால்,

போலீசார் அவனிடம் மேலும் விசாரணை மேற்கொள்ள காவல் நிலையத்துக்கு 108 ஆம்புலன்சில் அழைத்துச் சென்றனர் மேலும் இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Exit mobile version