Site icon Tamil News

கனடாவில் சீட்டிழுப்பில் 5 மில்லியன் டொலரை வென்ற தமிழர்கள்

கனடாவில் கடந்த ஜனவரி 4ம் திகதி இடம்பெற்ற லொட்டோ சீட்டிழுப்பில் தமிழர்களான மூவர் 5 மில்லியன் டொலரை வெற்றிபெற்றுள்ளனர்.

குறித்த மூவரும் உடன்பிறந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவராஜா பொன்னுத்துரை, அருள்வதனி உதயகுமார் மற்றும் யோகராஜா பொன்னுத்துரை ஆகியோரே இவ்வாறு வெற்றிபெற்றுள்ளனர்.

தமது வெற்றியை முதலில் அறிந்துகொண்ட  தவராஜா பொன்னுத்துரை பின்னர் ஏனையவர்களுக்கும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகை மூவருக்கும் சமமாக பிரித்து வழங்கப்படவுள்ளது.

இவர்களின் வெற்றி சீட்டு Woodbridge நகரில் நெடுஞ்சாலை (Highway) 27இல் அமைந்துள்ள MI Fuel எரிபொருள் நிலையத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version